நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Saturday, February 10, 2007

நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னிலும்

நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழா கவிதைப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் கவிதைகள் இங்கே கொடுக்கப்படும்.


நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101

உன்னிலும் என்னிலும்


உன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,
என் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...

உனது அறுவை சினேகிதி
எனது புருடா நண்பன்....

உனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்
எனக்கு பிடித்த வோட்கா..

உன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்
என் ஆசை கால் பந்து வீரன்...

உன் முதுகு மச்சம்
என் மார்புக்கீறல்..

உன் தாலிக்கொடியின் அழுத்தம்
என் மீசையின் குத்தல்

என இன்னும் ஆழமாய்
எல்லாம் பகிர்ந்து கொண்டாலும்...

உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்...

உதாரணமாய் என் முதல் காதல்....
உன்னில் ..?

(நண்பர்களே! உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்).

நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி

நண்பர்களே!

போட்டியின் விபரமும், விதிமுறைகளும் முந்தைய பதிவில் காணப்படுகிறது.

உங்கள் படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1. பாஸிடிவ்ராமா - positiverama@gmail.com

2. பரஞ்சோதி - paransothi@gmail.com

3. விழியன் - umanaths@gmail.com

மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

நன்றி!

இவண்,

நம்பிக்கை கூகுள் குழுமம்.

http://groups.google.co.in/group/nambikkai

Monday, February 05, 2007

"நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா" கவிதைப் போட்டி அறிவிப்பு

இணையத்தின் இனிய நண்பர்களே!
வணக்கம்!
உங்கள் நம்பிக்கையினால் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது இரண்டாம் அகவையினை ஏப்ரல் 23, 2007 - ல் கொண்டாடுகிறது.
நம்பிக்கை குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை தன் சகோதர குழுமத்தின் கொண்டாட்டத்துடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்து சிறப்பான போட்டி ஒன்றை நடத்த உள்ளது.

சென்ற வருடம் நடத்திய கவிதை./ கட்டுரை/கதை போட்டிகளில் பலர் சிறப்பாக பங்கெடுத்து சிறந்த பரிசுகளை அள்ளிச் சென்றார்கள். அவர்களுக்கும் , பரிசுகளை வழங்கிய நண்பர்களுக்கும் மீண்டும் பாராட்டுக்கள்.

இந்த ஆண்டிற்கான போட்டி சற்றே வித்தியாசமானது.

கவிதைப் போட்டி மட்டும் நடத்த உள்ளோம்.. தலைப்பு காதல் பற்றியது ..

என்னடா இது நம்பிக்கையில் காதல் கவிதையா? ஆ! என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. தலைவன் தன் தலைவிமீது பாடும் காதலாய் கவிதை இருத்தல் வேண்டும்.

சின்ன விளக்கம் இங்கே..

காதல் கவிதைகள் நம்பிக்கையில் வேண்டாம் என்று நான் கருதியதற்கு காரணத்தை முதலில் பணிவுடன் சொல்கிறேன். சில கவிதைகள் குழுவில் உள்ளவர்களுக்கு பெரிய நெளிசலை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது. அந்த கவிதைகளை மாத்திரம் தடுக்கும் போது அந்த படைப்பாளிகளுக்கு வருத்தம் ஏற்படும். என்ன செய்வதென்று புரியாமல் தற்சமயம் அனைத்து கவிதைகளையும் கொஞ்சகாலம் நிறுத்தி வைப்போம் என முடிவெடுத்து தெரிவித்தேன். ஏனெனில், குழுவில் பண்புசால் பெரியோர்களும், ஆன்மீகவாதிகளும், எல்லா வயதிலும் பெண்மணிகளும் இருக்கின்றனர் அல்லவா! குழுவில் இருக்கும் அன்பர்களது புதல்வரும்,புதல்வியரும் கூட இதில் வரும் மடல்களை படிப்பது உண்டு. எனவேதான் வேறு வழியில்லாமல் அந்த முடிவைத் தெரிவித்தேன்.
ஆனாலும் பல இளைஞர்கள், பல கவிஞர்கள் நிரம்பிய இந்த குழுவில் "காதல்" என்னும் கருப்பொருளை தடை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. அதில் எனக்கு ஈடுபாடு இல்லாவில்லாவிட்டாலும் அதில் வெறுப்பு இல்லை. படைப்பாளிகளுக்கு 'காதல்' என்பது ஒரு முக்கிய கருவாகதான் விளங்கி வருகிறது...இன்று வரை.

சரி. விஷயத்திற்கு வருகிறேன். ஆண் கவிஞர்களுக்கு மாத்திரமேயான இந்தக் "காதல் கவிதை போட்டியில்" என்ன விசேசம் என்றால், உங்கள் கவிதை எந்த அளவிற்கு எல்லை மீறாமல் அதே சமயம் அற்புதமாக இருக்கிறது என்பதை தீர்மானிக்க போவது பெண் நடுவர்கள். 24 வயதிலிருந்து 70 வயது வரையிலான பெண் நடுவர்கள் இதை தேர்ந்தெடுக்க போகின்றனர். உங்களுடைய கவிதை பற்றிய உண்மையான விமரிசனம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு.

நடுவர்களின் பெயர்கள் அவர்கள் அனுமதியின் பேரில் போட்டி முடிவோடு வெளியிடப்படும். படைப்புகள் உங்கள் பெயரில்லாமல் நடுவர்களுக்கு அனுப்பப்படும்.
பரிசுத்தொகை விபரம்
முதல்பரிசு ரூ 1500/-

இரண்டாம் ரூ 1000/-

மூன்றாம் பரிசு ரூ 500/-

ஆறுதல் பரிசு ரூ 100/- தலா 10 பேருக்கு.


போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி/ விதிமுறைகள்:

1. ஆண் படைப்பாளார்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர் நம்பிக்கை உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண் படைப்பாளர்கள் நடுவர் குழுவில் சேர விருப்பம் தெரிவித்தால் எங்களுக்கு மடலிடுக .. பெரிதும் வரவேற்கிறோம்.

2. படைப்பாளர்கள் தங்கள் முகவரியையும் தொலைபேசி/அலைபேசி எண்ணையும் தரவேண்டும். அவை பொதுவில் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதி சொல்லுகின்றோம்.
3. குறைந்த வார்த்தைகளுக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் கவிதை சிறந்ததாகக் கருதப்படும்.

4. பண்பாட்டின் எல்லையை மீறாத கவிதை பெரிதும் வரவேற்கப்படும். (இதுதான் மிக முக்கியம்)
5. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!
6. ஒருவரே அதிகபட்சம் 3 படைப்புகளை அனுப்பலாம்.
7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!படைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 02 - 2007 (புதன்) இந்திய நேரம் காலை 10.00 மணிக்குள்.
உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும்.
பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்களும் கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.
தங்களது கவிதையைப் பற்றி உண்மையாகத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அனுப்பப்படும் கவிதைகள் நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதையை வேறு எங்கு வேண்டுமானாலும் பிரசுரம் பண்ணலாம்.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
1.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com
2.பரஞ்சோதி umanaths@gmail.com
மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!
உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி!
இவண்,
நம்பிக்கை கூகுள் குழுமம்.
http://groups.google.co.in/group/nambikkai

Sunday, June 18, 2006

வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி

வாழ்க்கையில் வெற்றி பெறும்
எண்ணம் நம்முடைய மனதில்
ஆனால் தொடர் தோல்வி.

தோல்வியே வெற்றியின்
தூண்டுகோலாக இருக்கலாம்.

கடின உழைப்பு, விடா முயற்சி,
தன்னம்பிக்கை இவற்றை
படிகட்டாக்கி செல்.

தோல்வி என்ற காலன்
நம்மை தொடர்வது அரிது.

வாழ்வில் தினமும்
செயல் படுவோம் எனில்
வெற்றி பெறுவது உறுதி.


நன்றி: த. வினோத் குமார், குறிஞ்சி மலை.
(தினத்தந்தி - இளைஞர் மலர்)

Saturday, June 03, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 307

வாயுதேவா!


(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

#
உள்ளும் புறமுமாகி
உருவமில்லா அருவமானாய்
உருகொண்ட உடலினிலே
உயிர்கொடுத்து உயர்வும் ஆனாய்!
#
ஒன்றுமுதல் மூவிரண்டு
அறிவு கொண்ட ஜீவனெல்லாம்
உயிரோடு இருப்பதெல்லாம்
உன் கருணை யாலன்றோ!
#
பிராணன் உதான னென்றும்
வியான சமான அபான னென்றும்
ஐம்புலன்களைப் போல்
ஐவகைப் பாகமாகி
#
ஜடமான உடம்பினிலே
நற்பணியைப் புரிகின்றாய்- நான்
எப்பேரால் வாழ்த்திடுவேன்
வாழ வைக்கும் வாயுதேவா!
#
தசரதனின் தலைமகனின்
தன்மையான தூதுவனை
தரணிக்கு நீ கொடுத்தாய்
வாயுதேவா வணங்கு கின்றோம்.
#
சுவாசிக்கும் முறை யறிந்து
கும்பகம் நாம் செய்து விட்டால்
குவலயம் நமை போற்றும்
குணசீலன் ஆகிடுவோம்
#
உன்னை உணர்பவன்
உண்மையை உணர்கின்றான்
மூவகை ஆசைகளை
முழுதுமாய் துறக்கின்றான்.
#
காற்றடக்கும் வித்தை கற்றால்
காலனும் அடிமை ஆவான்- சகல
சித்தியும் கைகூடும்
சித்தனாய் ஆகிடுவான்!
#
சஞ்சீவி மலை பெயர்த்த
சிரஞ்சீவி சுந்தரனும்
வாயுவின் கருணையாலோ
வான கத்திலே பறந்தான்.
#
காற்றிலும் இரண்டு வகை
கண்டிடுவீர் அன்பர்களே! -அது
தென்றலாய் வருடும் சைவம்
புயலாய் மிரட்டும் அசைவம்!
#
பூமாரி பொழிந்திடவே
பூமியில் நீர் எடுத்து
மேகத்தில் சேர்ப்பதினால்
காற்றுக்கு கைகள் உண்டோ?
#
காற்றுக் குழல் பெற்றெடுக்கும்
குழந்தையே குரல் என்பர்
காற்றினால் மேகம் சிந்தும்
நீர் துளியைச் சாரல் என்பர்!
#
இசையென்னும் இனிமைக்கும்
ஓங்கார ஓசைக்கும்
ஆதாரம் ஆனவனே- உன்
அடியாரைக் காத்தருள்வாய்!
#
காற்று இருப்பதால் தான்
காது கூட கேட்கிறது
கேட்கும் ஒலி எல்லாம்
காற்றன்றோ படைக்கிறது.
#
வாகனங்கள் விடும் புகைதான்
கலியுகத்தின் அரக்கன் ஆவான்
காற்றினை கெடுத்திடுவான்
காலனை அழைத்திடுவான்
#
பசுமை மரம் வளர்த்து - காற்றை
பரிசுத்தம் ஆக்கிடுவோம்!
மாசற்ற மனித குலம்
தழைத்திடவே உதவிடுவோம்!
#
காற்றும் கடவுளும்
கண்ணுக்கு தெரிவதில்லை
கண்மூடி ஜெபித்திட்டால்
உண்மைதனை உணர்ந்திடுவோம்!
#
காற்றையும் உணர்ந் திடலாம்
கடவுளையும் உணர்ந் திடலாம்
இரண்டிற்கும் உருவ மில்லை
இன்பம் துன்பம் எதுவுமில்லை!
#
காற் றென்பர்
கடவுள் என்பர்
காற்றே கடவுளாதல்
ஆரும் அறிகிலார்!
#
காற்றே கடவுள் என்று
உள்ளுணர்வால் உணர்ந்த பின்னே
காற்றையே கடவுளாய்
தியானிப்பார் நலன் பெறுவார்!

Thursday, June 01, 2006

நம்பிக்கை போட்டி அறிவிப்பு!

அன்பின் இணைய நண்பர்களே!

நம்பிக்கை பிறந்தநாள் விழா போட்டிக்காக 50 க்கும் மேற்பட்ட படைப்புகள் குவிந்துள்ளன. நேற்றோடு படைப்புகள் பெறுவது நிறுத்தப் பட்டது.

நம்பிக்கையின் அழைப்பின் பெயரில் ஆர்வமுடன் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து அன்பர்களுக்கும் , நடுவர் பொறுப்பில் தங்கள் பொறுப்பை சீருடன் செய்துவரும் பெரியோர்களுக்கும் , பரிசளிக்க உள்ள அன்பர்களுக்கும், தங்கள் நண்பர்களையும் ஆர்வமுடன் பங்கேற்க வைத்தவர்களுக்கும் மிக்க நன்றி!

சிலர் தனிப்பட்ட முறையிலும் சில படைப்புகளுக்கு பரிசளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

படைப்புகள். அடுத்த வாரம் முதல் படைப்பளியின் பெயரோடு நம்பிக்கையில் மிளிரும்.

போட்டி முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த ஆறு படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட உள்ளது.

உங்கள் மேலான ஆதரவிற்கு நன்றி!நன்றி! நன்றி!

--
Join: http://groups-beta.google.com/group/nambikkai/

Wednesday, May 31, 2006

நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 207

ஆன்மீகம் எனது பார்வையில்...

இரவு கண்விழித்து தொலைக்காட்சி பார்த்து அதிகாலை 10 மணிக்கு :-) எழுந்து பெட்காபி குடித்து குளிக்க வேண்டுமே ... என்பதற்காக உடல் முழுதையும் நீரால் கொஞ்சம் நனைத்து காலை உணவை கடனே என்று உண்டும் உண்ணாமலும் , தன் உடலையும் உள்ளத்தையும் நோய்களின் சத்திரமாக கொண்டு, உழைத்த பணத்தையும் பொருளையும் மருத்துவர்களுக்கு கொடுத்துவிட்டு , சித்திரம் போன்ற நம் உடலை பேணாமல் அல்லலில் உழலும் விசித்திரப்பிறவிகள் பலர் வாழும் காலம் இது. இதில் இருந்து விடை பெற வேண்டாமா அன்பர்களே! தொடர்ந்து படியுங்கள்...

ஆன்மீகம் என்பது உடல் அழுக்கையும் மன அழுக்கையும் போக்கும் ஓர் அற்புதமான இலவச மருத்துவமனை என்றால் அது மிகையாகாது. ஆன்மீகத்தை பரப்பவே மதங்கள் தோன்றின. அன்பையே போதிக்கும் இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மற்றும் அனைத்து மதங்களிலும் பொதிந்து கிடக்கும் ஆன்மீக மருத்துவமுறைகள் ஏராளம்! ஏராளம்!. ஆனால், இன்றைய சமுதாயம் ஆன்மீகம் என்ற பாதையில் இருந்து நாகரீகம் என்ற பெயரில் நரகமான வாழ்க்கைக்கு மாறிக் கொண்டு இருக்கிறது.

நம்மை நாமே நாகரீகம் என்ற பெயரில் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம். நாகரீகத்தால் நமக்கு கிடைத்த நன்மையைக் காட்டிலும் பல மடங்கு தீமைகள்தான் கிடைத்துள்ளது. நாம் ஏன் மாறிக்கொண்டு இருக்கிறோம் என்று சிந்திதால் ஏமாறிக்கொண்டு இருக்கிறோம் என்பது புரியவரும். உதாரணத்திற்காக நாகரிகத்தின் பயனும் பலனும் இங்கு பார்ப்போம்.

கண்டு பிடிப்பு
1. ஒளி (ளிக்க்ட்)
பயன்: இருளில் தெளிவாய்ப் பொருட்களைக் காண பயன் படுகிறது
தீமை: கண் சம்பந்தமான பிரச்ச்னைகள்(ஈன்சொம்னிஅ) லொச்ச் ஒf Dஇச்cரிமினடிவெ Pஒநெர்

2. சக்கரம் :
பயன் : போக்குவரத்து இதனாலே சாத்தியமாயிற்று
தீமை : காற்று மாசுபடுதல்.

3.செயற்கை ரசாயணங்கள்:
பயன்: விவசாயப் புரட்சி
தீமை : மனித வாழ்நாள் குறைந்து போனது, உணவில் விஷம், ஒவ்வாமை, மூச்சுக்குழல் பாதிப்புகள்

4. அதிர்வலைகள்(FM &ஆM)
பயன்: தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி
தீமை : நரம்பு பாதிப்பு, முதுகு தண்டு பாதிப்பு, ஊளைச்சதை

மேற்கண்ட ஒவ்வொன்றும் ஆராய்ச்சி கட்டுரையாய் வரவேண்டியவை. சின்னதாய் குறிப்பிட்டுள்ளேன். விரிந்து சிந்தனை செய்தால் அவை நமக்கு புரியும்.

"வரும் முன் காத்தலே நலம்"

"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே " என்கிறார் திருமூலர்.

இன்றைய காலத்தில் தோன்றும் நோய்களுக்கு குணப்படுத்த மருந்து கொடுக்கின்றனர். அன்றையப் பெரியோர்களோ நோய்களை தவிர்க்கவே ஆன்மீகம் வாயிலாக தியானம் , உடற்பயிற்சி போன்றவற்றை அளித்தனர். சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இவை விளங்கும்.

இஸ்லாமிய அன்பர்களின் இறைவழிபாட்டில் முக்கிய அம்சம் தினமும் 5 முறை தொழுதல், வருடத்தில் 1 மாதம் நோன்பிருத்தல். இந்த இரண்டு விசயங்களைக் கடைபிடித்தாலே போதும், மனதையும் உடலையும் ஆரோக்கியமாய் வைத்துக் கொள்ள முடியும். தொழுகை செய்கையில் பல்வேறு நிலைகளில் உடலை மாற்றுவர் அதன்மூலம் உடலின் தசைகள் மற்றும் நரம்புகள் நன்றாகச் செயல் படுகின்றது. அசைவ உணவையே பிரதானமாய் அவர்கள் உண்டாலும் நன்கு ஜீரணமாகி விடுகிறது. மேலும் உண்ணா நோன்பு மூலம் தங்கள் உடலில் உள்ள தேவைக்கதிகமான கொழுப்பினை கரைத்தும் விடுகின்றனர். இஸ்லாத்தில் இருந்து சில துளியைத்தான் இங்கு குறிப்பிட்டேன்.

கிறிஸ்துவம் கூட்டுப்பிரார்த்தனைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மனதினை ஒருமுகப்படுத்தவும் செம்மை படுத்துவும் , திடப்படுத்துவதும் மூலமாக ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம் என்பதை அவர்களது பிரார்த்தனைகள் விளக்குகின்றன.

கூட்டுப்பிரார்த்தனை மற்றும் பஜனை எனப்படும் இறைவன் புகழை ஆடிப்பாடி மகிழ்தல் மூலம் அளப்பரிய மனவலிமை கிடைக்கிறது. இதை இன்றைய உளவியலரும் ஒத்துக் கொள்கிறார்கள். அசனம் என்னும் சமபந்தி விருந்து சமுதாய பாகுபாடுகளை அகற்றி ஒற்றுமை உணர்வை உணர்த்துகிறது.

மிகத் தொன்மையான இந்துமதக் கொள்கைகளை எடுத்துக் கொண்டால் அதில் ஆயிரம் ஆயிரம் மருத்துவமுறைகள் காணப்படுகின்றன். ஆயுர் வேதம் ஆயுள் வேதம் என்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கடவுளரும் ஒவ்வொரு மருத்துவராய் செயல்படுகின்றனர்.

உதாரணமாக ஞானக்கடவுள் விநாயகரை கருத்தில் கொண்டால் அவர் பெரும் பாலும் நீர்நிலைகளில் அரச மரமும் , வேம்பு மரமும் இணைந்த இடங்களில் வீற்று இருபார். இவ்விரண்டு மரங்களின் சேர்க்கை சுற்றுப்புரத்தில் உள்ள நச்சுக்க் கிருமிகளை நீக்கும் தனமை வாய்ந்தது. தோப்புக்கரணம் போடும் போது நமது உடலின் ஆதாரமாக விளங்கும் மூலாதாரச் சக்கரம் உற்பத்தி செய்யும் மின்காந்த அலைகள் சுவாதிஷ்டாணாம், அனாஷகதம், மணிபுராகம், விசுத்தி, ஆக்ஞா சகஸ்ராரம் என்ற சக்கரங்களின் மூலமாக சிரசை அடைகிறது. பின்னர் தலையய குட்டிக் கொள்வதன் மூலம் உடல் முழுதும் பரவுகிறது. மூளை செல்கள் புதுப்பிக்கப் படுகின்றது. ஞானம் , புத்திசாலித்தனம் பெருகுகிறது( சிலர் ஏதேனும் யோசனை செய்கையில் தலையை சொறிவதை காண்போம். அதன் பின் விளக்கம் இப்படித்தான்)

குழ்ந்தைப்பேரு அற்றவர்கள் பழனி சென்று முருகனை தரிசித்தால் பாக்கியம் அடைவர்கள் என்றார்கள். காரணம் பதையாத்திரை சென்று கந்தனை காண்கையில் வழியில் உள்ள கற்கள் பாதங்களில் படுவதன் மூலம் அக்குபஞ்சர் சிகிச்சைபோல் குணம் கிடைக்கிறது. கர்ப்பப்பை தசைகள் சுருங்கி விரிந்து வலுவடைகிறது. சுத்தமான காற்றால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகிறது. கர்ப்பபை மலங்கள் வியர்வையினால் வெளியேறி விடுகின்றன. குழந்தைப் பேறும் வாய்க்கிறது.

பழங்கால கோயிலகள் வாஸ்துவை அடிப்படையாய்க் கொண்டு கட்டப்பட்டவை. மேலும் சமஸ்கிருத , தமிழ் மந்திரங்கள் , அபிஷேகங்கள், கற்பூர ஆராதனைகள் இவற்றினால் கோயில் கொடி மரங்களின் அமைப்பினால் ஒரு நேர்மறையான சக்தி கோயிலில் நிரம்பிக் காணப்படும். ஆகையால்தான் நாம் ஆலயம் சென்றால் நம் ஆ(ன்மா) லயமாகிறது. இன்னும் விரிவாக எழுதிக் கொண்டே செல்லலாம். இருப்பினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதற்கேற்ப இத்துடன் நிறைவு செய்கிறேன்.

அனைத்து மதங்களும் போதிக்கும் சில முக்கிய கடமைகள்
1. அதிகாலை எழல்
2. குளிர்நீரில் குளித்தல்
3. தினசரி வழிபாடு மற்றும் தியானம்
4. பஜனை பாடுதல்
5. உபவாசம்(விரதம்)
6. மந்திர உச்சாடனை செய்தல்
7. பாத யாத்திரை

ஆகவே மதங்கள் எனப்படுவது மனிதனை நல்வழிப்படுத்தவே உருவானது. அதை சிலர் தவறாய் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது.

அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கிறது.

எம்மதமும் நல் மதமே! அனைத்தும் சம்மதமே!

ஆன்மீகம் நம் உடலையும் உள்ளத்தையும் கட்டிக்காக்கவே பயன்படுகிறது.

ஆன்மீகம் அறிவோம்! அன்பாய் வாழ்வோம்!

நன்றி!

இன்றே கடைசி

இணையத்தின் இனிய நண்பர்களே!

வணக்கம்!

அன்பர் பலரின் வேண்டுகோளுக்கிணங்கி படைப்பை அனுப்புவதற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

உங்கள் அன்பினால் பிறந்த இந்த "கூகுள் நம்பிக்கை குழுமம்" தனது முதலாம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31 மே ௨006.
படைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன!

விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களது முகவரியையும் , உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் தாருங்கள்!

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பலாம்!

உங்கள் பெயரை எடுத்தபின்னரே நடுவர் குழுவிற்கு படைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெற முடியும். முடிவுகள் வெளியாகும் போது அனைவரது பெயரும் வெளியிடப்படும்.

Tuesday, May 30, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை 107

இயற்கை மருந்து

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)

குறிப்பு: துயரங்களின் உயரங்களைத் தொட்டு, சோகங்களின் எல்லை வரைச் சென்று, இனி வாழ வழியே இல்லையென்று, தற்கொலைக்கே தயாராகிவிட்ட ஓர் இளைஞன், அதிலிருந்து மீண்டு, புனர்ஜென்மம் எடுத்து, புதுவாழ்வு கண்டு, சமுதாயம் போற்றும் ஒரு சாதனையாளன் ஆகிறான். எப்படி மாறினான் ? மாற்றியது எது? இது தான் கதை, கவிதை நடையில், கதாநாயகனின் வாக்குமூலமாய் வருகிறது.


இலக்கு இல்லாத பயணமாய் நடக்கிறேன்.
இறுகிய இதயத்துடன்.
வாழ்க்கையில் வெறுப்பு
காதலில் தோல்வி
வாட்டிடும் வறுமை
முயற்சியில் வீழ்ச்சி!

சிந்தை மோனத்தில், பார்வை வானத்தில்
தந்தையும், தாயும், தமக்கையும் சேர்ந்து
தந்தனர் பட்டம், படிப்பு முடிக்காமலேயே!

தண்டச்சோறு தான் அவர்கள் தந்த பட்டம்,
இதயம் வலிக்கிறது
ஆண்மை துடிக்கிறது தன் மானத்தால்
கனத்த மனத்தினனாய் நான்.

சோகம் என்னை செக்குமாடாய் சுற்றிவர
கால்கள் மட்டும் நடக்கின்றன.
சோகம் கூடிவிட்டால் வேகமும் கூடிவிடுமோ?
ஏனிந்த அவசரம், எங்கு செல்ல இந்த பரபரப்பு?
பாவம்,கால்கள் அறியாது,ஆனால் பதட்டம், பயம், கேள்வி
எல்லாம் கலந்த உணர்வு கலவையாய்
குழப்பம் என்னும் எரிமலை குழம்பு
உருவாகி, என் உள்ளத்தில் கொந்தளிக்க,
ஆற்றாமையால் உருவான ஒரு பெரும்மூச்சு
புயல் காற்றாய் என் நாசிக்கரையை கடக்கிறது,
காற்றில் கலக்கிறது.

ஊன்றுகோல் ஒன்றிருந்தால் நான் எழுந்து நடந்து விடுவேன்
பற்றுக்கோல் இல்லாத பசுங்கொடியாய் அல்லவா நான் பரிதவிக்கின்றேன்
பரிதாபம் என் நிலை, ஊறு செய்ய காத்திருக்கும் உறவினர்கள்
உதவி செய்ய ஊரினிலே யாரும் இல்லை.
என்னை உதவாக்கரை என்று உதாசினம் செய்தார்கள்,
உதவி என்றவுடன் ஒதுங்கியே சென்றார்கள்.
நானும் தான் என் வயதுக்குள் எத்தனை துன்பங்கள்?
எத்தனை துயரங்கள்? எத்தனை சோகம்? எத்தனை வறுமை?
எத்தனை எத்தனை அவமானங்களை எல்லாம் கூட சந்தித்துவிட்டேன்,
சகித்துக் கொண்டேன்.

ஆனால், இனியும் பொறுத்துக் கொள்ள என் இதயத்தில் வலுவில்லை
இன்று என் பிரபஞ்சமே பிரளயத்தால் அழிந்து விட்டது போன்ற ஒரு பிரம்மை
நான் மட்டும் தனிமையாய், ஒருமையாய், வெறுமையாய், நிராதரவாய், நிர்கதியாய் நிற்கின்றேன்.
அதனால் தான் நான் இந்த தகாத முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கின்றேன்.

இப்போது நான் எங்கு செல்கிறேன் தெரியுமா? ஹீம் ....
வேறு எங்கே செல்லப் போகிறேன்
வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களும்
தொல்லைகளிலிருந்து விடுபட விளைபவர்களும்
எங்கு செல்வார்களோ?
எங்கு சென்றால் என்னை உதவாக்கரை, தண்டச்சோறு என்று சொல்ல மாட்டார்களோ?
எங்கு சென்றால் திரும்பமுடியாதோ?
எங்கு சென்றால் உடல்பாரத்தைக் கூட உதறிவிட்டு
காற்றோடு காற்றாக கலந்து விடலாமோ?
அங்கு தான்!
அதே அந்த தற்கொலைத் தளத்திற்கு தான், இவ்வளவு அவசரமாக செல்கிறேன்.

ஆனால், யாரோ என்னை தொடர்வது போல் இருக்கவே நின்று விட்டேன்
சுற்றுமுற்றும் பார்க்கிறேன், யாருமே இல்லை
வானத்தை அண்ணாந்து பார்த்தேன் அங்கு ஒரு கார்மேகம் என்னையே உற்றுப்பார்க்கிறது
ஏதோ சொல்லத் துடிக்கிறது. ஹீம் ...
காற்றடித்தால் கரைந்து போகும் கார்மேகத்தால்
எனக்கு என்ன உதவி செய்து விட முடியுமாம்?
ஏன் என்னை தொடர்கிறதாம்?
என் வறுமையை போக்கவா?
என் சோகத்தை தீர்க்கவா? இல்லை
என் திறமைகளை வெளி உலகுக்கு உணர்த்தி
என் வாழ்வை ஒளிரச் செய்யவா?
என்னை மிளிரச் செய்யவா? அது முடியாது,
முடிந்து விட்டது என் வாழ்க்கை,
அஸ்தமித்த வாழ்க்கை எப்படி மிளிரும்? எப்படி ஒளிரும்?.

இப்போது என் உள்ளத்தில் அலை அலையாய் பல கேள்விகள் எழுகின்றன,
அஸ்தமித்த ஆதவன் மீண்டும் உதிப்பது இல்லையா?,
கரை வரை வந்த அந்த அலைகள் கூட,
கரையிலேயே கரைந்து விடுவதுமில்லை உறைந்துவிடுவதுமில்லை
மீண்டும் கடலில் சங்கமித்தே தீரும்.

இந்த தீர்மானத்தோடு மீண்டும் நான் மேகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன்
அது இன்னும் பல உண்மைகளை உள்ளன்போடு எனக்கு உணர்த்தியது
மகனே! நீ மாய்ந்து விட்டால் ஓய்ந்து விடும் பிரச்சனைகள் என்று தவறாக எண்ணி விட்டாய்.
அதனால் தான் இந்த தகாத முடிவுக்கு நீ தள்ளப்பட்டிருக்கிறாய்
மரணமென்பதும் அழிவு என்பதும் உடலுக்குத் தான். ஆன்மா அழிவதில்லை
ஆன்மா என்பது உடலை இயக்குகின்ற ஆற்றல்
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாதென்று
அறிவியலாரே ஒப்புக் கொள்கின்றனர்
எனவே தற்கொலை என்பது கூட ஒரு தற்காலிகமான நிவாரணம் தானே ஒழிய நிரந்தரம் இல்லை.

அடித்துக் கொண்டு வரும் ஆற்று வெள்ளத்தில் சிறிய மீன்குஞ்சுகள் கூட எதிர் நீச்சல் போடுகின்றன
சிறிய பறவைகள் தான் அந்த சிட்டுக்குருவிகள் அவை புயல்காற்றையும் கூட கிழித்து பறக்கின்றன.

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்
புழுவிடம் கூட உள்ளது போர்க்குணம்.
போர்க்குணம் என்பது ஆயுதம் ஏந்துவது அல்ல, தீவிரவாதி ஆவதும் அல்ல
வாழ்க்கையில் வறுமையை, துன்பத்தை, துயரத்தை
நமக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எல்லாவற்றையும்
எதிர்த்து போராடுவது தான்.

எத்தனை முறை அறுந்து அறுந்து விழுந்த போதும்
தளராத மன உறுதியோடு தனக்கென வீடு ஒன்றை
தானே கட்டி முடிக்கிறது அந்த சிலந்தி
இந்த மாதிரி பூச்சி புழுக்களிடமெல்லாம் வீரமும், விடா முயற்சியும்,
போர்க்குணமும் இருக்கும் போது
உன்னிடம் இல்லை என்பது தான் வேதனை.

மகனே! நீ தற்கொலை செய்து கொண்டால்
உன் உடலை புதைக்க மாட்டார்களய்யா,
எரித்து விடுவார்கள், எரித்து சாம்பலாக்கி விடுவார்கள் பாவிகள்,
ஏன் தெரியுமா? இப்படி ஒரு கோழையை பிள்ளையாக பெற்றேனே
என்று அந்த பூமித்தாயின் மனம் புண்படுமாம்,
இந்த கோழையில் உடலைக்கூட ஏற்க்க மாட்டேன் என்று சொல்லி விடுவாளாம்,
எனவே கவலைகளை காற்றாய் நினைத்து கிழித்து பறந்து விடு
மீன்குஞ்சிடம் பாடம் கற்றாய் அல்லவா? வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடு
அமிழ்ந்து போகாதே.

நன்றாக என்னைப் பார் மகனே!
நான் பூமியில் நீராக இருந்தேன்,
சூரியனின் சூழ்ச்சியாலே மாய்ந்தேன்,
ஆவியானேன், அலைந்தேன், மேகமானேன்,
இதோ தென்றல் என்னை தீண்டி விட்டது
மீண்டும் மாரியாய் நான் மாறி மண்ணில் வந்து
நீராய் ஜனிக்க இருக்கிறேன்.

மானிடனும் அப்படித் தான் நிம்மதியாய் வாழ்வான்
நிமிடத்தில் மாய்வான்.
விதியின் பயனாலே மீண்டும் மண்ணில் பிறந்து விடுவான்
எனவே வாழ்க்கையை எதிர்த்து போராடு, போரிடு, வாழ்ந்து காட்டு,
வா மகனே! வந்து விடு.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
செய்து முடி, அல்லது செய்து கொண்டே செத்து மடி
வாழ்ந்து காட்டு, வா மகனே! வந்து விடு

இப்படியாக பேசி முடித்தது மேகம்
வெட்கத்தால் கூசி துடித்தது என் தேகம்.
மேகம் தன் முதல் துளி முத்தத்தை என் உச்சியில் பதித்தாள்
சிலிரென்றது, சிலிர்த்தேன்
இதோ என் நெற்றியில்
ஆகா! என் கன்னத்தில்
என்ன ஒரு இன்பம். என் உடலெல்லாம் முத்தமழை முத்துகளை சிந்தி
என்னை குளிரச் செய்து விட்டாள்,
மழையில் நனைந்தது உடை மட்டுமல்ல
உடல் மட்டுமல்ல, இது வரை உள்ளத்தில்
கொந்தளித்துக் கொண்டிருந்த எரிமலைக்குழம்பும்
குளிர்ந்து உறைந்து இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது,
என் மனமாற்றத்தை உணர்ந்து விட்டவள் போல்
பளிச்சென கண் சிமிட்டி உலகம் அதிரும் வண்ணம் கலகலவென சிரித்தாள்
வானத்தை அண்ணாந்து பார்த்தேன்
அங்கே மேகத்தை காணவில்லை
என் சோகத்தையும் தான்.

வானம் மட்டும் தெளிந்த நீரோடையாய் தெளிந்து கிடக்கிறது
என் உள்ளத்தை போல்
இந்த உலகமே புதியதாக, பூந்தோட்டமாக, அழகாக,
என்னை பார்த்து பாசத்தோடு சிரிப்பது போல் இருந்தது
நானும் புதிய மனிதனாய் புனர்ஜென்மம் எடுத்தேன்
எனக்குள் ஒரு நம்பிக்கை தீப்பொறி,
எனக்குள் ஒரு போர்குணம், தன்னம்பிக்கை,
எல்லாம் வந்துவிட்டதை உணர்ந்தேன்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் செய்து முடி, அல்லது செய்து கொண்டே செத்து மடி,
வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்
என்ற உற்சாக மந்திரங்களை எனக்கு நானே உச்சரித்து கொண்டு
வீடு திரும்பினேன்.

உள்ளத்தையும் கூட பண்படுத்தும் பண்புள்ள
உயர்ந்த மருந்து இயற்கை மருந்து தானே!!!?

நம்பிக்கை கவிதை போட்டி 306

பெண் என்பவள் நமது தெய்வமே!

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்த படைப்பு இது)

படைப்பாளி பெயர் : திருப்பூர். தியாகு



பெண் என்றால் பேயும்
இரங்கும் என்றார்கள் -ஆமாம்
இனம் இனத்தோடு
சேரும் என நினைத்தேன்!

பெண்என்றால் மாயை
என்றார்கள் -ஆமாம்
புரியாதது எல்லாம்
மாயை தானே என்றேன்!

எனது கருத்துக்கள்
இவ்வாறு இருக்க
அன்னை காளி
கனவில் வந்தாள்
அவனியில் எனக்கோர்
ஆக்கம் தந்தாள்!

அத்தனை பெண்ணிலும்
உள்ளவள் நானே
அக்காவாய் தங்கையாய்
அமைந்த பெண்கள்
அனைத்தும் நானே

என்னை வணங்க
நினைத்தால் முதலில்
பெண்ணை வணங்கு
போதும் என்றால்!

பெண்ணவள் கண்ணீர்
பெற்றவன் உலகில்
பெற்றவை அனைத்தும்
இழப்பானென்றால்!