நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Friday, April 28, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 302

நம்புங்கள் நாளை நமதே!

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).


நண்பனே எழுந்துகொள்!
அன்பால் உலகை அணைத்துகொள்!
கனவுகள் காண் கவின்மிகு உலகை
கற்பனை செய்! - மற்றவனை
திட்டாமல் மன்னிக்க கற்றுகொள்!

அல்லாவை கும்பிடுவான் அவனை நேசி!-இல்லை
இயேசுவை கும்பிடுகிறானே அவனையும் நேசி -உனது
நேசிப்பின் கரம்விரிந்துகொண்டே போகட்டும்
கருணை பொங்கும்விழிகளால் பார் உனது
சகோதரனை அவனிடம் ஆயிரம்குறைகள் -இருந்தாலும்
அவன் சகோதரன் அல்லவா!

வார்த்தைகளால் அல்ல, வர்ணிப்பால் அல்ல
அன்பால்தான் முடியும்
வர்க்கபேதமற்ற சமுதாயம்!-எடுத்துகொள்
அன்பெனும் ஆயுதம்
ஆயிரம் அனுகுண்டுகள் வந்தாலும்
அழியாது நெஞ்சில் நிறைந்த
அன்பென்று சொல்! -உலகம்
சுற்றுவதுஏதோ விசையால் அல்ல -அன்பெனும்
பசையால் நண்பனே புரிந்துகொள்!

எல்லாம் நிறைந்த இனிய உலகில் -நீ
எதற்க்கு பிறக்க போகிறாய் !
குறைகள் நிறைந்த உலகம்தான் - உனது
குத்துசண்டை மைதானம் விழும்
குத்துகளை அன்பால் மாற்று!
பல்லக்கில் ஏற பலரும் விரும்புவர் -பல்லகை
தூக்க நீதானே இருக்கிறாய்! -உனது
தோளை கொடு துன்பத்தை துடை !

ஆயிரம் முறை நீ தவறி விழலாம்- மறுபடி
பல்லாயிரம் முறை நீ எழவேண்டும்!
எழுவதை எண்ணு!
விழுவதைஎண்ணாதே!
நாளை என்பது நம்பிக்கை
பெற்ற பிள்ளை
நம்பு நண்பனே நாளை உனதே!

0 Comments:

Post a Comment

<< Home