நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Sunday, May 07, 2006

சாதிக்கப் பிறந்தவன்

என் வாழ்வின் அடையாளங்களென்று
இவ்வுலகில் எதுவுமில்லை
இதுவரை - என்னைத் தவிர...


இலட்சியங்களை நோக்கிய
என் பயணப் பாதையெங்கும் -
தோல்வியெனும் முட்கள்.

கடந்து வந்த வழிகளில் எல்லாம்
இரத்தம் தோய்ந்த -
என் பாதச் சுவடுகள்.

அகல் விளக்கில் எரியும்
தீச்சுடரென என் மன உறுதி
பெரும் புயலாய் சீறும்
அவநம்பிக்கையில் அவ்வப்போது
அணைந்து போகும்.

கண்களில் நிரம்பிய கனவுகளோடு
சிறகை விரித்து வானம் அளக்கும்
சிறு பறவையென என் மனம் -
காற்றாடிகளைக் கண்டும்
ஏனோ அச்சம் கொள்ளும்..!

தொடரும் தோல்விகள்
எனைச் சுட்டாலும் - அதிலும்
பாடங்கள் பயிலும் என் உள்ளம்..!

எதிர் வரும் தடைகளும்
வெற்றிக்கான விதையாய் -
என்னில் வேரூன்றும்..!

ஆனாலும் -

தோல்விகளோடு போராடி
சமயங்களில் நான்
சோர்ந்தமரும் தருணங்களில் -

மேற்கில் விழுந்து - பின்
கிழக்கில் புதிதாய் எழும் -
சூரியன்...

தேய்ந்து - பின் வளர்ந்து -
பிரகாசமாய் ஒளிரும் நிலா...

பூமியைப் பிளந்தெழும் சிறு புல் -

இவை எனை நோக்கி
மெளனமாய் சொல்லும் -
“இளைஞனே... எழுந்திரு
நீ சாதிக்கப் பிறந்தவன்..!”

- நன்றி: சரோ - நிலாச்சாரல்.காம்

1 Comments:

At 11:58 AM, Blogger NambikkaiRAMA said...

அருமையான கவிதை! நிலாச்சாரலுக்கு நன்றி!

 

Post a Comment

<< Home