நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Monday, May 15, 2006

நம்பிக்கை

தண்ணீரில்
மீன்கள் வாழலாம்.

கண்ணீரில்
மனிதன் வாழலாமா?

பயிர்களின் நடுவில்
களைகள் நிலைக்கலாம்.

மனிதனின் மனதில்
கவலைகள் முளைக்கலாமா?

பணத்தை கூட
மனிதன் இழக்கலாம்
தன்னம்பிக்கையை இழக்கலாமா?

மனிதா சிந்கித்துப் பார்
உனது நேரத்தை
நீ வீணடித்து விடாதே.


த. நேரு, வெண்கரும்பூர்.

நன்றி: தினத்தந்தி – இளைஞர் மலர்

4 Comments:

At 2:22 PM, Blogger Amar said...

//தினத்தந்தி – இளைஞர் மலர்//

இளைஞர் மலர் மற்றும் குடும்ப மலரில் வரும் புதுக்கவிதைகளை அடிக்கடி படிப்பது உண்டு.நிறைய நல்ல கவிதைகள் வரும்...

 
At 2:46 PM, Blogger பிரதீப் said...

அருமையான தன்னம்பிக்கைக் கவிதை.
அண்ணா நன்றி.

 
At 2:57 PM, Blogger பரஞ்சோதி said...

வாங்க சமுத்திரா,

உங்க வருகைக்கும், பதிவுக்கும் நன்றி.

அப்படியே நம்பிக்கை போட்டிக்கு ஒரு படைப்பு அனுப்புங்கள்.

 
At 2:58 PM, Blogger பரஞ்சோதி said...

தம்பி பிரதீப்,

எப்படி இருக்கீங்க. நீங்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம் தானே.

 

Post a Comment

<< Home